Sunday, March 25, 2012

தர்ஹாவுக்கு முன்னால் NTJ யின் மூன்றாவது தெருமுனைப்பிரச்சாரம்


அல்லாஹ்வின் பேருதவியால் காத்தான்குடியிலுள்ள Dr.அஹ்மட் பரீட் மாவத்தை வீதியில் அமையப்பெற்றுள்ள முஹ்ஸின் மௌலானா தர்ஹாவுக்கு முன்னால் தேசிய தௌஹீத் ஜமாஅத் தனது மூன்றாவது தெருமுனைப்பிரச்சாரத்தை மேற்கொண்டது அசத்தியம் நடைபெறும் அவ்விடத்திலேயே கூட்டம் நடைபெற்ற படியால் பலர்களும் அதில் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்! இஸ்லாத்தில் கப்ரு வழிபாட்டின் விபரீதம் பற்றியும் அல்லாஹ்வை மாத்திரம் வழிபடுவதின் முக்கியத்துவம் பற்றியும் உரையில் தெளிவுபடுத்தப்பட்டது மேலும் அவ்விடத்திலேயே ஒரு துண்டுப்பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது
அசத்தியம் நடைபெறும் இடத்திற்கு சென்று அதன் விபரீதத்தை உணர்த்துவது நபிமார்கள் அனைவரும் மேற்கொண்ட முக்கிய பிரச்சாரப்பணியாகும் அவ்வாறு எடுத்துக் கூறுகின்ற போதே பலவிதமான எதிர்ப்புகள் அவ்விடத்திலேயே தோன்றும் வாய்ப்பை நன்றாகவே நபிமார்கள் அறிந்திருந்தும் அதை விட்டும் பின்வாங்கவில்லை

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் காத்தான்குடியில் ஷிர்க் நடைபெற்று வரும் மற்றுமொரு இடத்தில் எமது நான்காவது தெருமுனைப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளோம்
தற்போது தெருமுனைப்பிரச்சாரத்தின் 2 தொடர்கள் வெளியிடப்பட்டுள்ளன அதைக் காண இங்கே கிளிக் செய்யவும்
http://www.youtube.com/watch?v=Gpez7S3DpLA&feature=g-all-u&context=G2adf8d5FAAAAAAAABAA

2-http://www.youtube.com/watch?v=FysZ1a9XPhk&feature=g-all-u&context=G2730726FAAAAAAAAAAA