அல்லாஹ்வின் பேருதவியால் 07-03-2012
ஆகிய இன்றைய தினம் தேசிய தௌஹீத் ஜமாஅத் தனது தெருமுனைப் பிரச்சாரத்தை முதலாவதாக தொடங்கியது
இஸ்லாத்தை அசல் வடிவில் எடுத்துக் கூறுவதற்கு மிகவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்த
இந்த தெருமுனைப் பிரச்சாரம் உண்மையில் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டுபண்ண
வல்லது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை
இன்று இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்கு
பல்வேறு பட்ட நவீனசாதனங்கள் இருந்தும் தெருமுனைப்பிரச்சாரத்தை நாம் கையிலெடுத்ததற்கு
யதார்த்தமான காரணி இதுதான்
அதாவது நபிமார்கள்
இவ்வுலகில் இஸ்லாத்தை எடுத்துரைத்த சரித்திரங்களை நாம் புரட்டிப்படித்தால் மக்களை சந்திக்கும்
சந்தர்ப்பங்களிலெல்லாம் இத்தூய மார்க்கத்தை அவர்கள் எடுத்துரைத்துரைப்பதில் பின்வாங்கியது
கிடையாது மேலும் எடுத்துரைக்கும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் இன்னல்களால் அவர்கள் தஃவாக்களத்திலிருந்து
சடைவடைந்ததும் கிடையாது இதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உண்டு
இந்த அடிப்படையில்
தேசிய தௌஹீத் ஜமாஅத் தனது முதலாவது தெருமுனைப்பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது ஜமாஅத்தின்
பிரச்சாரகர் M.C.M ஸஹ்றான் "இஸ்லாம் என்றால் என்ன?" என்ற கருப்பொருளில் தனது சொற்பொழிவை
ஆற்றினார் உரையில் ஷிர்க்கின் விபரீதம், இஸ்லாத்தை அறிந்து பின்பற்றுதலின் முக்கியத்துவம்
போன்ற பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தினார் பலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!
அந்நிகழ்வின் சில படங்களை தற்போது வழங்குகிறோம்
மிக விரைவில் இதன் வீடியோவை அப்லோட் செய்கிறோம்